ஒரே நாளில் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட எதற்கும் துணிந்தவன் - என்ன காரணம் தெரியுமா?

sunpictures actorsuriya சூர்யா எதற்கும் துணிந்தவன் etharkumthunidhavan
By Petchi Avudaiappan Mar 11, 2022 09:11 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஒரே நாளில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன், நடிகர் சத்யராஜ், வினய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. 

ஒரே நாளில் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட எதற்கும் துணிந்தவன் - என்ன காரணம் தெரியுமா? | Etharkum Thunidhavan Lifted Today Many Theatre

தமிழகத்தில் சுமார் 7 கோடி ரூபாயை முதல் நாளில் படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படம் இன்று வெளியாகி இருப்பதால் எதற்கும் துணிந்தவனின் தமிழ் பதிப்பு பல தியேட்டர்களில் தூக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எதற்கும் துணிந்தவன் தெலுங்கு பதிப்பு மட்டும் சில தியேட்டகளில் ஓடிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஒருகாலத்தில்  தெலுங்கு படங்கள் தமிழில் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. இதேபோல்  தெலுங்கு மாநிலங்களில் நன்றாக ஓட ஆரம்பித்த நிலையில் தற்போது படங்களின் தரம் காரணமாக தமிழ்ப் படங்களுக்கு வரவேற்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 

இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.