ஈரோடு மதிமுக எம்.பி மருத்துவமனையில் அனுமதி; தற்கொலை முயற்சியா..? பரபரப்பு!

Marumalarchi Dravida Munnetra Kazhagam Tamil nadu Erode
By Jiyath Mar 24, 2024 12:32 PM GMT
Report

ஈரோடு மதிமுக எம்.பி கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

எம்.பி. கணேசமூர்த்தி

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈரோடு மதிமுக எம்.பி மருத்துவமனையில் அனுமதி; தற்கொலை முயற்சியா..? பரபரப்பு! | Erode Mp Ganesamurthys Suicide Attempt

இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியின் தார்மீக அடிப்படையில் எம்.பி. கணேசமூர்த்தி தேர்தலில் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

திமுகவை விமர்சித்து ரிமோட்டால் டிவியை உடைத்தது இதனால்தான் - கமல்ஹாசன் விளக்கம்!

திமுகவை விமர்சித்து ரிமோட்டால் டிவியை உடைத்தது இதனால்தான் - கமல்ஹாசன் விளக்கம்!

தற்கொலை முயற்சி?

இதனிடையே கடந்த ஒருவாரமாக அவர் மன அழுத்தத்தில் இருந்தது வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு மதிமுக எம்.பி மருத்துவமனையில் அனுமதி; தற்கொலை முயற்சியா..? பரபரப்பு! | Erode Mp Ganesamurthys Suicide Attempt

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.