ஈரோடு கிழக்கு தொகுதி எங்க தொகுதி; காங்கிரஸ் தான் போட்டியிடும் - அழகிரி
ஈரோடு கிழக்கு தொகுதி எங்க தொகுதி அதில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவெரா திருமகன் உயிரிழந்ததை அடுத்து காலியகாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. பாஜகவும் குழக்களை அமைத்துள்ளது.
காங்கிரஸ் போட்டி?
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் அது எங்கள் தொகுதி என்றார்.
நாங்கள் நின்ற தொகுதி வென்ற தொகுதி. எங்களுடைய கூட்டணி கட்சிளை சந்தித்து ஆதரவு கோர உள்ளோம், இன்று மாலை கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.