ஈரோடு பெரியார் நகர் பகுதியில் அதிமுக : திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. காலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் களம் காண்கின்றனர்.
மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க, ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 52 இடங்களில் 238 வாக்குசாவடிகளும், இது தவிர கூடுதலாக 20% என்ற அடிப்படையில், 48 ரிசர்வ் மையங்கள் என மொத்தம் 286 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திமுக அதிமுக வாக்குவாதம்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது , வாக்குச்சாவடி அருகே நின்று வாக்கு சேகரித்ததில் திமுக அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்யும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.