ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது.
நிறைவு பெற்றது வேட்பு மனுத்தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா, மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து காலியாக உள்ள அத்தொகுதியில் பிப்-27இல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில், போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் கடந்த ஜன-31 முதல் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
10ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்
வேட்பு மனுக்களை 70-க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வேட்புமனு நிறைவு பெறும் நேரத்திற்குள்ளாக வந்த சிலருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது, மேலும் வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் எனவும் மனுக்களை வாபஸ் பெறுவதற்கு பிப்-10 ஆம் தேதி கடைசி நாள், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.