ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட போவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி
இடைத்தேர்தல் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம், அப்போது பேசிய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிட உள்ளோம்.
ஏ, மற்றும் பி படிவங்களில் இரட்டை இலை கேட்டு கையெழுத்திடுவேன். எடப்பாடி பழனிசாமியுடன் நாங்கள் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.
கூட்டணி கட்சிகள் எங்களிடம் பேச்சுவார்தை நடத்தி வருகின்றனர். பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடன் சென்று ஆதரவு கேட்போம். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்க நான் எப்போதும் காரணமாக இருக்கமாட்டேன் என்றார்.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கினால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்.
குழப்பத்தை உருவாக்கியது நாங்களல்ல, பிரிந்து கிடக்கும் அணிகள் சேர வேண்டும் என்பதே விருப்பம்.