ஓ.பி.எஸ் ஆதரவாளரான புகழேந்தியை துரத்தி துரத்தி தாக்க முயன்ற இபிஎஸ் ஆதரவாளர்கள்..!

O Paneer Selvam Edappadi K. Palaniswami
By Vinothini May 22, 2023 06:33 AM GMT
Report

எடப்பாடி பகுதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருந்த ஓ.பி.எஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் அரங்கில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

eps-supporters-tried-to-attack-ops-supporter

இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அவர்கள் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியுள்ளனர். அப்போது திடீரென அ.தி.மு.க.வினர் ஆலோசனை கூட்டத்தில் புகுந்து அங்கிருந்த கட்சி கொடி மற்றும் சின்னங்களை அகற்ற வேண்டும் என கூச்சலிட்டு அங்கிருந்த பேனர்கள் மற்றும் கொடிகளை அகற்ற முயற்சித்தனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தாக்குதல்

இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் நிர்வாகிகள் அங்கிருந்து காரில் புறப்பட்டனர்.

eps-supporters-tried-to-attack-ops-supporter

அப்போது எடப்பாடி நகர செயலாளர் முருகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர்.

அப்போது நிர்வாகிகள் கிளம்புவதை பார்த்த அவர்கள் புகழேந்தியின் காரை வேகமாக தட்டியுள்ளனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயன்றனர்.

சுதாரித்துக் கொண்ட புகழேந்தியின் கார் டிரைவர், காரை விரைவாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் புகழேந்தி எந்தவித காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பினார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.