தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் நான்கு முதலமைச்சர்கள் : உதயநிதியை கிண்டல் செய்த ஈபிஎஸ்

Udhayanidhi Stalin DMK Edappadi K. Palaniswami
By Irumporai Dec 13, 2022 09:03 AM GMT
Report

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வுசெய்யப்பட்டார்.

 அமைச்சராகும் உதயநிதி :

இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் :

 உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. உதயநிநி அமைச்சர் ஆகிவிட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடபோகிறதா? ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று கொண்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் நான்கு முதலமைச்சர்கள் : உதயநிதியை கிண்டல் செய்த ஈபிஎஸ் | Eps Strongly Criticizes Udhayanidhi Stalin

எடப்பாடி கிண்டல் 

இவர் வந்தால் நடைபெற்று வரும் ஊழலுக்கு எல்லாம் தலைமையாக இருந்து செயல்படுவார். குடும்ப ஆட்சிக்கு , வாரிசு ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஏனென்றால் நாடு மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காத ஒரு ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி. மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் தான் இருப்பார்கள்.

ஆனால் தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்.ஸ்டாலின், அவரது மனைவி, அவருடைய மருமகன் அவருடைய மகன். ஒரு முதலமைச்சருக்கே தாங்காத போது, நான்கு முதலமைச்சர் என்றால் நாடு தாங்குமா? என விமர்சித்தார்.