கஞ்சாவை ஒழிப்போம்: எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில் இன்று 6 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.
இந்நிலையில் சேலம் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு அதிமுக வேட்பாளர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது, பொதுமக்கள், பெண்கள், சிறுமிகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் வீதியில் நடமாட முடியவில்லை.

போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது, சட்ட ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துவிட்டது, இளைஞர்கள் போதைபழக்கத்துக்கு அடிமையாகிவிட்டனர், இதற்கு ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம் என தெரிவித்தார்.