Friday, Jul 18, 2025

அந்த இடத்தில் வளர்ச்சி மையம் கூடாது..!! தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..!

M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami
By Karthick 2 years ago
Report

 வடலூர் பெருவெளியில் 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ கட்டுவதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் வடலூர் பெருவெளியில், சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ கட்டுவதற்கு இந்த விடியா திமுக அரசு முனைந்துள்ளது.

eps-slams-dmk-for-vadalur-incident

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் வடலூர் பெருவெளியில் இம்மையத்தை கட்டுவதால், ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.

எனவே, வடலூர் பொதுவெளியை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்