ஓபிஎஸ் அருகே அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் தாங்கி கொள்ள முடியவில்லை - மா.சுப்பிரமணியன்

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Oct 19, 2022 03:21 PM GMT
Report

ஓபிஎஸ் பக்கத்தில் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் தாங்கி கொள்ள முடியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சு பேட்டி 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

ஓபிஎஸ் அருகே அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் தாங்கி கொள்ள முடியவில்லை - மா.சுப்பிரமணியன் | Eps Could Not Bear Sitting Next To Ops

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது.

உளவுத்துறை தகவல் தெரிவித்தும் சட்ட ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமல் இருந்தது. தீவிரமாக கவனித்திருந்தால் ஆரம்பத்திலேயே சமாளித்திருக்கலாம் என அறிக்கை. எடப்பாடி பழனிசாமி அசட்டையாக இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் அருகில் அமர்வதை இபிஎஸ் ஆல் சகித்து கொள்ள முடியவில்லை 

நேற்று எடப்பாடி பழனிசாமி கலவர நாடகத்தை நடத்தி,வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுடையவர்கள் மீது நடவடிக்கை; ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துவிட்டது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு என்பது பேரவையின் விதிகளில் இல்லாத ஒன்று. பேரவை விதிகள் 2 ஓ படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே விதியில் உள்ளது. தன் அருகே ஓ.பன்னீர் செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.