அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு!
Udhayanidhi Stalin
Tamil nadu
Edappadi K. Palaniswami
Madras High Court
By Jiyath
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சனாதனத்தை ஆதரிப்பதாக அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வழக்கு
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் "தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தன்னை பற்றி அவதூறாக பேசியுள்ளார். தன்னை பற்றி உதயநிதி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும். ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.