கொரோனாவால் திடீரென பச்சையாக மாறிய தாய்பால் - வைரலாகும் வீடியோ
பெண் ஒருவருக்கு கொரோனா தாக்கியது. இதன் பிறகு, அவருடைய தாய் பால் பச்சை நிறத்தில் மாறிய சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தாய்பால் தங்கத்திற்கு இணை என்று நாம் பார்க்கிறோம். அதற்கு முக்கியமான காரணம் தாய்ப்பால் அவ்வளவு எளிதாக கிடைக்காது. தாய்மை அடைந்த பெண்களிடமிருந்தே அது கிடைக்கும்.
இந்நிலையில், மாடலிங் நடிகை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு, அவருடைய தாய்பாலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை விஷயத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார்.
தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 2 குழந்தைகளுக்கு தாயான மாடலிங் நடிகை ஆஷ்மிரி, சமீபத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளானார். இவர் மட்டுமல்ல, இவர் குழந்தை உட்பட இவர் குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தாக்கியது.
தனது ஒரு வயது மகளுக்கு அவர் தாய்பாலை தனியாக ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் பிடித்து பின்னர் குழந்தைக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்து வந்தார். அப்பொழுது கொரோனா பாதிப்பிற்கு முன்பு வரை தாய்ப்பால் வெள்ளை நிறமாக இருந்தது.
ஆனால், கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாய்ப்பால் பச்சை நிறமாக மாறியுள்ளது. இந்த இரண்டையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் ஆஷ்மிரி பதிவிட்டுள்ளார். அதற்கு அவரே விளக்கமும் கொடுத்துள்ளார்.
தனது உடம்பில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தனது தாய்பாலில் இயற்கையாகவே ஆண்டிபாடில் அதிகமாகி இருக்கிறது. அதனால் அந்த பாலை குடிக்கும் குழந்தைக்கு இயற்கையாக கொரோனாவை எதிர்த்து போராடும் குணங்கள் அதிகமாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.