மணமேடையில் மணமகன் செய்த காரியம் - திடுக்கிட்டு அலறிய விருந்தினர்கள் - வைரல் வீடியோ
காசியாபாத்தில் மணமேடையில் மணமக்கள் செய்த காரியத்தை பார்த்து உறவினர்களே அலறி திடுக்கிட்டு நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காசியாபாத்தில் நடந்த திருமண வரவேற்பில் மணமக்கள் இருவரும் உறவினர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். மேடையில் இருந்த மணமகன் தனது நண்பரை அழைத்து கைத்துப்பாக்கியை வாங்கினார். துப்பாக்கியை வாங்கிய பிறகு, மாப்பிள்ளை வானத்தை நோக்கி பட்பட்டென்று சுட்டார்.
மாப்பிள்ளை துப்பாக்கியால் சுட மணப்பெண் மாப்பிள்ளை கையை பற்றிக்கொண்டார். வரவேற்பு நிகழ்ச்சி வந்த உறவினர்கள், விருந்தினர்கள் திடுக்கிட்டு நின்றனர். சிலர் கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இத்திருமணத்துக்கு வந்த நண்பர் ஒருவர் இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ போலீஸ் கண்ணில் பட இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ -
शादी के जोश में खोया होश,दूल्हा दुल्हन पर कानूनी कार्रवाई की तैयारी,ग़ाज़ियाबाद के घंटाघर का मामला pic.twitter.com/aTeoI2xcZD
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) December 14, 2021