ரிவ்யூ நல்லதா தரேன்; ஹோட்டல் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த விருந்துனர்!
பெண் ஹோட்டல் உரிமையாளரை நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டை ஏர்பிஎன்பி மூலம் வாடகைக்கு விட்டுள்ளார். மது வீட்டை அல்லது வீட்டின் ஒரு பகுதியை ஹோட்டலை போல வாடகைக்கு விடும் ஒரு நடைமுறைதான் ஏர்பிஎன்பி.
இந்நிலையில், 43 வயது நபர் ஒருவர் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். வெறும் 12 மைல் தொலைவில் வசித்த போதிலும், அந்த நபர் இதனை செய்துள்ளார். அதன்பின், இருவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர்.
பெண் பகீர் புகார்
அப்போது, அந்த நபர், மசாஜ் செய்துவிடுகிறேன் என்று கூறி செய்து்ள்ளார். தொடர்ந்து, அத்துமீறி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் நடுங்கியவாறு கத்தியுடன் பெட்ரூமில் ஒளிந்துள்ளார்.
ஆனால், வெளியே சென்ற அந்த நபர் மீண்டும் வந்து எதுவும் நடக்காததுபோல் ரூமிற்கு சென்று தூங்கியுள்ளார். மேலும், காலையி்ல் கிளம்பும் முன் நல்ல ரிவ்யூ தருகிறேன்.. இதோடு இதை விட்டுவிடு எனக் கூறி சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸில் புகாரளித்துள்ளார். தொடர் விசாரணையில், அந்த நபர் மீண்டும் ஒரு இடத்திற்குச் சென்று அத்துமீறலாம் அதுபோல நடக்கக் கூடாது என்றால் நான் புகார் அளிக்க வேண்டும் என்று நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.