இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கவீரர் பேர்ஸ்டோ 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆடம் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால், பவர்-பிளே முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்தது. எனினும்,தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய மலான் மற்றும் மொயின் அலி ஜோடி சிறப்பாக விளையாடியது. மலான் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 1 சிக்சர் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்தார்.
மொயின் அலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் கப்டில் மற்றும் மிட்சல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
ஆரம்பத்திலே அதிர்ச்சி அளிக்கும் விதமாக கப்தில் 4 (3) ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 5 (11) ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்ததாக மிட்செல்லுடன் கன்வே ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன் சேர்த்த இந்த ஜோடியில் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கன்வே 46 (38) ரன்களிலும், அடுத்து களமிறக்கிய பிலிப்ஸ் 2 (4) ரன்னிலும் வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மிட்செல் 41 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இதனிடையே அதிரடியாக ரன் சேர்த்துக்கொண்டிருந்த ஜேம்ஸ் நீஷம் 27 (11) ரன்களில் கேட்ச் ஆனார். முடிவில் அதிரடி காட்டிய மிட்செல் 72 (47) ரன்களும், சாண்டனர் 1 (1) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 19 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் வோக்ஸ், மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரஷித் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிவில் ‘டை’யில் முடிந்த போட்டியில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
அதற்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நியூசிலாந்து அணி அடியெடுத்து வைத்துள்ளது.

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
