செந்தில் பாலாஜியின் தம்பிக்கு செக் - அதிரடி காட்டும் அமலாக்கத்துறை

V. Senthil Balaji
By Thahir Jun 17, 2023 05:11 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Enforcement notice to Senthil Balaji

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அவரை 8 நாட்கள் காவல் நிலையத்தில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது.

செந்தில் பாலாஜி தம்பிக்கு நோட்டீஸ் 

அதேநேரத்தில் செந்தில் பாலாஜியை வெளியே அழைத்து செல்லக்கூடாது என்றும் மருத்துவமனையில் வைத்தே விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

Enforcement notice to Senthil Balaji

இதனிடையே, செந்தில் பாலாஜி தரப்பிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை களம் இறங்கி இருக்கிறது. அதன்படி, செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.