டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
Enforcement Directorate
By Thahir
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
முதலமைச்சருக்கு சம்மன்
அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
9 மணி நேரம் விசாரணை
ஏற்கனவே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.
காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.30 மணி வரை நடத்தப்பட்டது. விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன் என்று கெஜ்ரிவால் கூறினார்.