மைதான கேலரி சரிந்தது 100 பேர் காயம் : கேரளாவில் அரங்கேறிய சோக சம்பவம்

Kerala Malappuram
By Irumporai Mar 20, 2022 07:03 AM GMT
Report

கேரளா மாநிலம்,மலப்புரத்தின் பூங்கோட்டில் நேற்று இரவு கால்பந்து போட்டி நடைபெற்றது.இந்த போட்டியின் போது பார்வையாளர்கள் அமர தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கேரளாவின் பூங்கோடு கிராமத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியை காண 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். பனமரக்கட்டைகளால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக  அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாரின் உயிருக்கும் ஆபத்து இல்லை என போலீசார் கூறியுள்ளனர். கேலரி உடைந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த பார்வையாளர்கள், அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக,உள்ளூர் காவல்துறையினர் கூறுகையில் இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையிலான செவன்ஸ் இறுதிப் போட்டி நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதுமேலும்,இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும்,சுமார் 200 பேர் காயம் அடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.