ட்விட்டர் நிர்வாக குழுவில் சேர எலன் மஸ்க் மறுப்பு - ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால் அறிவிப்பு
உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலன் மஸ்க் பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கியிருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக மாறிய எலன் மஸ்க் அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்வது பற்றித் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எலனை நிர்வாகக் குழுவில் சேர்க்க முடிவு செய்தார்.
இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் அண்மையில் எலன் மஸ்க் ட்விட்டர் நிர்வாக குழுவில் சேர உள்ளதாக அறிவித்தார்.
Elon has decided not to join our board. I sent a brief note to the company, sharing with you all here. pic.twitter.com/lfrXACavvk
— Parag Agrawal (@paraga) April 11, 2022
ஆனால், தற்போது ட்விட்டர் நிர்வாக குழுவில் சேர எலன் மஸ்க் மறுத்து விட்டார் என பராக் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் பல முறை அவரிடம் கேட்டுப் பார்த்தும், அவர் மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிர்வாகக் குழுவில் சேர்ந்து ட்விட்டர் நிறுவனத்தையே எலன் மஸ்க் புரட்டிப்போடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது எலன் மஸ்க்கின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.