டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து திடீரென விலகிய எலான் மஸ்க் - என்ன காரணம்?
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்பை ஆதரித்து, எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வந்ததோடு, பல கோடிகளை நன்கொடையாக வாரி வழங்கினார்.
DOGE
அந்த தேர்தலில் வெற்றி பெற்று, 2வது முறையாக அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், அரசு நிர்வாகத்தின் செலவுகளைக் குறைப்பதற்கு, அரசாங்க செயல்திறன் துறையை(DOGE) உருவாக்கி அதன் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க்கை நியமித்தார்.
இந்த துறைக்கு பொறுப்பேற்ற எலான் மஸ்க், ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, அரசு செலவுகளை குறைப்பது போன்ற பல்வேறு அதிரடி நவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன்மூலம், அமெரிக்க அரசின் ஒருநாள் செலவில் இருந்து ரூ.34,000 கோடி வரை குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக 130 நாள்கள் மட்டுமே பொறுப்பு வகிக்க ஒப்புக் கொண்டிருந்த மஸ்க்கின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடையவுள்ளது.
விலகிய மஸ்க்
இந்நிலையில், DOGE பொறுப்பில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவுக்கு வருவதால், வீணான செலவினங்களைக் குறைப்பதற்கான ஒரு பணியை வழங்கி எனக்கு வாய்ப்பளித்த டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
As my scheduled time as a Special Government Employee comes to an end, I would like to thank President @realDonaldTrump for the opportunity to reduce wasteful spending.
— Elon Musk (@elonmusk) May 29, 2025
The @DOGE mission will only strengthen over time as it becomes a way of life throughout the government.
செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட DOGE துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்'' என தெரிவித்துள்ளார்.