‘‘இந்த 2 பேர் தான் எங்க டீம்முக்கும் டேஞ்சர் " - தென் ஆப்பிரிக்க கேப்டன் ஓபன் டாக்

elgarrues firsttestloss
By Irumporai Jan 01, 2022 11:19 AM GMT
Report

இந்திய அணியில் முகமது ஷமி, பும்ரா இருவரும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது .

அதோடு செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது .இதில் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது .

தென்னாப்பிரிக்காவில் 20 விக்கெட்டுகளில் 18 விக்கெட்டுகள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்துள்ளனர். இதில் குறிப்பாக முகமது ஷமி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட் என்ற புதிய மைல்கல்லை எட்டினார் .

அதன் பிறகு 2-வது இன்னிங்சிலும் 3 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறும்போது," இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தென்ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் .

குறிப்பாக இந்திய அணியில் முகமது ஷமி, பும்ரா இருவரும் தென்னாபிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் .இப்போதுள்ள நிலையில் இந்திய அணிக்கு சரிவிகிதமாக பந்துவீச்சாளர்கள் கிடைத்துள்ளன. அதோடு முகமது ஷமி பந்துவீச்சில்வேரியேஷன் இருக்கின்றது .

இதில் சில பந்துகள் எதிர்த்து விளையாட கடினமாக உள்ளது .இதனால் பும்ரா, முகமது ஷமி இருவரும் தான் எங்கள் அணி பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவாகவும் ,அச்சுறுத்தலாகவும் இருப்பார்கள் " இவ்வாறு அவர் கூறியுள்ளார்.