மட்டன்; இறால் வாசனை; திருமணத்திற்குள் புகுந்த யானைகள் - பைக்கிள் எஸ்கேப் ஆன மணமக்கள்!
திருமண நிகழ்ச்சியில் யானை புகுந்ததால் மணமக்கள் பைக்கில் தப்பி சென்றனர்.
திருமண விருந்து
மேற்கு வங்கம், ஜோவல்பங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் தன்மோய் சிங்கா. இவருக்கும் மம்பி சிங்கா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான உறவினர்கள் பங்கேற்றனர்.
திருமண விருந்தாக ஆட்டுக்கறி, இறால், உருளைக் கிழங்கு, காய்கறி சூப் உட்பட பல்வேறு உணவு வகைகள் சமைக்கப்பட்டிருந்தன. அப்போது, உறவினர்கள் விருந்துண்ண அமர்ந்த போது திடீரென யானைகள் கூட்டமாக கொட்டகைக்குள் புகுந்தன.
தப்பியோட்டம்
உடனே அனைவரும் கூச்சலிட்டு தப்பியோடினர். மணமக்களும் பைக்கில் தப்பிச்சென்றனர். அதனையடுத்து அடுத்தடுத்து நடைபெற இருந்த திருமணங்களும் ஒத்திவைக்கப்பட்டன. உணவு வாசனைக்கு திருமண நிகழ்ச்சிகளுக்குள் புகுந்து விடுகின்றன.
அத்துடன் யானைகள் பயத்தால் திருமணம் நடத்தினால் வரமாட்டோம் என்று உறவினர்களும் நண்பர்களும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.