கேரளாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த பெண் யானை - பதற வைக்கும் வீடியோ வைரல்
கனமழைக்கு 10 பேர் பலி
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழை வெள்ளத்தில் அடித்துச் சென்ற சிலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பல ஓடைகள் நிரம்பி வழிகிறது.
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை
இன்று காலை கேரள மாநிலம், அதிரப்பள்ளி என்ற இடத்தில் ஆற்றைக் கடக்க முயற்சி செய்த பெண் யானை ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்தது. இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது, அந்த யானை, ஆற்றை கடந்து ஒரு தீவில் தஞ்சமடைந்து பாதுகாப்பாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Trying to cross a river in full spate, a mail elephant was caught in heavy in flow at Athirappally in Kerala on Tuesday morning. Forest officials said that the elephant has taken shelter in an island and safe. @NewIndianXpress@xpresskerala#elephant #flood #KeralaRains #rain pic.twitter.com/dYhSYopbHk
— Raam Das (@PRamdas_TNIE) August 2, 2022