அதிகம் சாப்பிட்டதால் உயிரிழந்த காட்டு யானை! யானைக்கே இப்படி ஒரு சோகமா?
death
eat
elephant
much more
By Anupriyamkumaresan
மேட்டூர் அருகே அதிகளவு பனம்பழம் தின்றதால் காட்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அருகே உள்ள காட்டில் 22 வயதுடைய ஆண் யானை மர்மமான உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் சுமார் அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்று செரிமானம் ஆகாமல் வயிறு
வீங்கி யானை உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து யானையின் தந்தங்களை அகற்றி, சடலத்தை அங்கேயே புதைத்தனர்.