யானையை வேட்டையாடிய குற்றம் சாட்டப்பட்ட 60 வயது முதியவர் காவலில் மர்ம மரணம்... - 15 வன அதிகாரிகள் கைது...!

Elephant Death Odisha
By Nandhini 1 மாதம் முன்

யானையை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் காவலில் உயிரிழந்ததால் 15 வன அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 வன அதிகாரிகள் கைது

கடந்த 31ம் தேதி, படாம்பா மலைத்தொடரின் கீழ் உள்ள ஹிபிண்டா ரிசர்வ் வனப்பகுதியில் புல்லட் ஓட்டப்பட்ட ஆண் யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த யானை வேட்டையாடிய வழக்கில் சடகோச்சியா கிராமத்தில் வசிக்கும் தனேஸ்வர் பெஹேராவை (60) வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து அவர் காவலில் வைக்கப்பட்டார். காவலில் வைக்கப்பட்ட அவர் திடீரென உயிரிழந்தார்.

இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 15 வனத் துறை அதிகாரிகளை ஒடிசா போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில், அந்த நபரின் காவலில் வைக்கப்பட்ட மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த அக்கிராம மக்கள், வன பிடி வீட்டிற்கும் தீ வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4.79 லட்சம் இழப்பீடும், மகனுக்கு அரசு வேலையும் வழங்க வனத்துறை அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 3 தனிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   

elephant-dies-in-custody-15-forest-officials-held

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.