எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும் , அது பற்றி கவலை இல்லை : நாராயணன் திருப்பதி

BJP
By Irumporai Jan 31, 2023 12:52 PM GMT
Report

இன்னும் 2 நாட்களில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தான் வேட்புமனு கடைசி தேதி அதற்குள் கூறிவிடுவோம் என பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண திருப்பதி கூறியுள்ளார்.  

ஈரோடு இடைத்தேர்தல்

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது , இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அந்த கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். நாளை மறுநாள் அந்த வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகின்றது.

பாஜக பேச்சு வார்த்தை  

எதிர்க்கட்சியான அதிமுக இதுகுறித்து இன்னும் யோசனையில் இருக்கிறது. அதே போல அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் இன்னும் உறுதியான முடிவை கூறவில்லை. இன்று சென்னையில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை பாஜக முக்கிய நிர்வாகிகள் உடன் நடைபெற்றது.

எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும் , அது பற்றி கவலை இல்லை : நாராயணன் திருப்பதி | Elections In 2 Days Narayan Tirupathi Bjp Admk

அது முடிந்ததும் பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நிற்க பாஜகவில் இருந்தே நிறைய நபர்கள் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆனால், அனைத்தும் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து தான் இதனை முடிவெடுப்பார்கள் என கூறினார்.

மேலும், ஓபிஎஸ் இபிஎஸ் என பலரும் கலந்து ஆலோசித்து உள்ளனர், எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும்; அது பற்றி கவலை இல்லை எனக் கூறிய நாராயண திருப்பதி ,இன்னும் 2 நாட்களில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தான் வேட்புமனு கடைசி தேதி அதற்குள் கூறிவிடுவோம் என கூறினார்.