மகாராஷ்டிர முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த மகன் - வெளியான புகைப்பட்டதால் வெடித்தது சர்ச்சை
மும்பையில், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் இருக்கையில் அவரது மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த மகன்
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இல்லாத சமயத்தில், அவருடைய மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே முதலமைச்சருடைய அலுவலகத்தில் அன்றாட நடவடிக்கைகளை சட்டவிரோதமாக கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இருக்கையில் ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Maharashtra CM Eknath Shinde's Son Shrikant Shinde Illegally handling CM Office's day to day activities in absense of CM Eknath Shinde as CM is on his Delhi Tour. pic.twitter.com/3G2Z8D3A3C
— Karnataka Congress SevaDal (@SevadalKA) September 23, 2022