முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? மத்திய அரசு உத்தரவு
நாடு முழுவதும் ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முட்டை
கர்நாடகாவை சேர்ந்த பிரபல 'எகோஸ்' நிறுவன முட்டையில் தடை செய்யப்பட்ட மருந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளித்துள்ள எகோஸ் நிறுவனம், தங்களது பண்ணைகளில் ஆன்டிபயாடிக்குகளை பயன்படுத்துவதில்லை.
அரசு உத்தரவு
இது மண் அல்லது நீர் மூலமாக ஏற்பட்ட சுற்றுப்புற மாசாக இருக்கலாம். சமூக வலைதளங்களில் குறிப்பிடப்படும் வேதிப்பொருளின் அளவு FSSAI அனுமதித்த வரம்பிற்குள்ளேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிறுவன முட்டை மாதிரிகளையும் பரிசோதித்து அறிக்கை அளிக்க மண்டல அலுவலகங்களுக்கு FSSAI ஆணையிட்டுள்ளது.