மீண்டும் கொரோனா.. அதிவேகமாக பரவும் EG.5 புதிய வகை வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் தகவல்!
புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கடந்த 3 வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தியது. இதனால் பல இழப்புகள் ஏற்பட்டது, பல நாடுகளில் பலத்த அடி விழுந்தது. தற்பொழுது மீண்டும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் EG.5 என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறுகையில், "அமெரிக்கா மற்றும் பிரிடனில் EG.5 என்ற புதிய கரோனா வைரஸ் பரவி வருகிறது" என்று கூறியுள்ளார்.
நிறுவனம் தகவல்
இதனை தொடர்ந்து, "இந்த புதிய திரிபு அபாயகரமானதாக திடீரென தொற்று பரவலையும் உயிர்ப்பலிகளையும் அதிகரிக்கக் கூடியதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்படுகிறது. இது தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இந்தச் சூழலில் உலக நாடுகள் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, மரபணு பகுப்பாய்வு விவரங்களை உடனுக்குடன் உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பாக உயிர்ப்பலி ஏதும் இருந்தால் அதுபற்றிய விவரமும்,
வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் உபாதைகள் தொடர்பான விவரங்களையும் அளிக்க வேண்டும். அது மட்டுமல்லாது தொடர்ந்து தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.