"வாடா தம்பி..மேல வாடா தம்பி" - வெளியானது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் First Single

released actor surya first single edharkum thunindhavan vada thambi
By Swetha Subash Dec 15, 2021 12:45 PM GMT
Report

'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியானது. இதை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக டாக்டர் புகழ் பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.

மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது.

அண்மையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது