வசனங்களை மறக்கக்கூடாது.. பெண்கள் பாதுகாப்பு எங்கே? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

Vijay Tamil nadu Edappadi K. Palaniswami
By Vinoja May 24, 2026 04:26 PM GMT
Report

தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை கேள்வி எழுப்பி, முதலமைச்சர் விஜய், கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி பதிவிட்ட எக்ஸ் தள பதிவினை மேற்கோள் காட்டியே இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

வசனங்களை மறக்கக்கூடாது.. பெண்கள் பாதுகாப்பு எங்கே? - எடப்பாடி பழனிசாமி கேள்வி | Edappadi Urges Cm To Focus On Womens Safety

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் ஆரம்பித்துவிட்டது.

வசனங்களை மறக்கக்கூடாது.. பெண்கள் பாதுகாப்பு எங்கே? - எடப்பாடி பழனிசாமி கேள்வி | Edappadi Urges Cm To Focus On Womens Safety

இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால், “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.