தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது - ஈபிஎஸ் ஆவேசம்!

M K Stalin Tamil nadu ADMK DMK Edappadi K. Palaniswami
By Jiyath Mar 17, 2024 02:30 PM GMT
Report

திரு. மு.க.ஸ்டாலினுக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் "லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது. 

தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது - ஈபிஎஸ் ஆவேசம்! | Edappadi Palansamy X Post About Dmk Mk Stalin

சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

மக்களை பிளவுபடுத்தும் பாஜக வீட்டுக்கு அனுப்பப்படும் - மும்பையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

மக்களை பிளவுபடுத்தும் பாஜக வீட்டுக்கு அனுப்பப்படும் - மும்பையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

வெட்கக்கேடானது

ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது - ஈபிஎஸ் ஆவேசம்! | Edappadi Palansamy X Post About Dmk Mk Stalin

மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு , வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.