ஒரே அணி அதிமுக தான் அடுத்த முதல்வர் இபிஎஸ்தான் : உற்சாகத்தில் கே.பி.முனுசாமி
இனிமேல் ஒரே அணி அதிமுக தான், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தமிழகத்தின் அடுத்த முதல்வரும் இபிஎஸ் தான் என்று கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானம்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் எதிர்த்த வழக்குகளில் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது, இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
பொதுச்செயலாளர் இபிஎஸ்
அதன்படி , அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை என்றும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்த நிலையில் தீர்ப்பு சாதகமாக அமைந்த நிலையில், தொண்டர்களை சந்திக்க அதிமுக தலைமை அலுவலகம் சென்ற எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார்
அடுத்த சிஎம் இபிஎஸ்
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, இனிமேல் ஒரே அணி அதிமுக தான், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தமிழகத்தின் அடுத்த முதல்வரும் ஈபிஎஸ் தான் என தெரிவித்துள்ளார்