திமுகவின் சகாப்தம் முடிவடையும்: எடப்பாடி பழனிசாமி

dmk stalin palaniswami era
By Jon Mar 25, 2021 01:27 PM GMT
Report

விரைவில் திமுகவின் சகாப்தம் முடிவடையும் என பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று பழனியில் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். கடவுளே இல்லை என கூறி வந்த திமுகவினர் தற்போது வேல் பிடித்துள்ளனர் என்றும், திமுகவின் சகாப்தம் முடிவடையும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.