சென்னையில நீர் தேங்கவில்லை என்பது முற்றிலும் பொய் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது, சென்னையினை பொறுத்தவரை காலை முதல் இரவு வரை பெய்து வருகிறது.
சென்னையினை பொறுத்தவரை முன் கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி மேற்கொண்டதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என தற்போது சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் கூறி வருகிறது.
நிவாரண உதவி வழங்கிய எடப்பாடி
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தரவில்லை. பல பகுதிகளில் மழைநீர் வடியாததால் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையிலும் மழை நீர் உள்ளது
சென்னையில் முறையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
அவசர கோலத்தில் திட்டமிடாமல் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டதால்தான் மழைநீர் தேங்குகிறது. சென்னையில் மிதமான மழையே பெய்துள்ளது. பெரிய அளவில் மழை பெய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறினார்.