எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது செருப்பு வீச்சு - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்

edappadi-palanisamy-shoe-delivery-on-the-car
By Nandhini Dec 05, 2021 11:03 AM GMT
Report

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது அமமுகவினர் செருப்பு வீசியதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

அதிமுகவினர் மட்டுமல்லாமல் அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது செருப்பு வீசியதாக அமமுகவினர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் தூண்டுதலின் பெயரில் அமமுகவினர் செருப்புகளை வீசியதாகவும், அவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு, தடி, கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.