மின் கட்டணத்தை உயர்த்தி கடும்சுமையை வைத்துள்ளது விடியா அரசு : கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Jul 19, 2022 05:32 AM GMT
Report

மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.

மின்கட்டணம் உயர்வு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்துள்ளார்.

மின் கட்டணத்தை உயர்த்தி கடும்சுமையை வைத்துள்ளது விடியா அரசு : கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி | Edappadi Palanisamy Elctric Bill Senthil Balaji

பயன்படுத்து யூனிட் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாகவும் கூறிய அமைச்சர் ,42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம்.

சுமை வைத்துள்ளது விடியா அரசு

இருந்தாலும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும் எனக் கூறினார்.  

மேலும், 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம்.

இருந்தாலும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய நிலையில் மின கட்டண உயர்வுக்கு எடப்பாடிபழனிசாமி கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் :தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என பதிவிட்டுள்ளார்.