கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் - அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம்

ADMK Edappadi K. Palaniswami
By Nandhini Aug 27, 2022 03:21 AM GMT
Report

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில்  உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க, அதிமுக அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி இருக்கிறார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுக அரசுக்கு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் கிடையாது. 

Edappadi-palanisamy-admk

அதிமுக கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை திமுக அரசு தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்திட்டத்திற்கு, மூடு விழா நடத்த முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்து, திண்டிவனத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.