திமுக ஆட்சி வந்தாலே காவலர்களின் கைகள் கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி
ADMK
DMK
Edappadi K. Palaniswami
By Irumporai
திமுக ஆட்சி வரும் போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்பட்டு இருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடிபழனிச்சாமி :
திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான்
எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கதவுகள் திறக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்
சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது
மேலும் சட்டம் ஒழுங்கை காக்க காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டபகலில் தலைநகரில் காவல் நிலையம் எதிரே படுகொலை நடந்து உள்ளது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கு இதுவே மிகச் சிறந்த உதாரணம் என்று கூறினார்.