எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்: கொந்தளித்த புகழேந்தி
admk
edappadpalanisamy
By Irumporai
எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார் .
கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற முடியாது.
அவர் பிரச்சாரத்துக்கு செல்லாமல் இருந்தால் ஓரிரு இடங்களிலாவது அதிமுக வெற்றிப்பெறும். சசிகலா மீது எந்த கோபமும் இல்லை.
எந்த நேரத்திலும் ஓபிஎஸ் சசிகலாவுடன் செல்ல வாய்ப்புள்ளது. அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான், அதிமுகவை காப்பாற்ற முடியும் எனக் கூறினார்.