ஜெயலலிதாவாக மாறிய எடப்பாடி ..காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி : சிரித்த எடப்பாடி பழனிசாமி

edappadi palanisamy rajendrabalaji
By Irumporai Sep 24, 2021 12:01 PM GMT
Report

விருதுநகர் சாத்தூர் வழியாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்காக தென்காசிக்கு சென்றுக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு வெங்கடாசலபுரம் நெடுஞ்சாலையில் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதோடு, எடப்பாடி பழனிசாமியுடன் வந்தவுடன்  ராஜேந்திர பாலாஜி காரை விட்டு இறங்கி இ.பி.எஸுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் சூட்டியதோடு நடு ரோட்டில், அவரது காலில் விழுந்து மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதாவாக மாறிய எடப்பாடி ..காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி : சிரித்த எடப்பாடி பழனிசாமி | Edappadi Became Jayalalithaa Rajendra Balaji

அவரை தொடர்ந்து பிற அதிமுகவினர்களும் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்தனர்.  ஜெயலலிதா, சசிகலா காலத்துக்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிசாமி காலத்திலும் கட்சி தொண்டர்கள் காலில் தொடர்கிறது.

 மாவட்ட அளவிலான பொறுப்பையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஆக்டிங் தலைமையாக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு ராஜேந்திர பாலாஜி காக்கா பிடித்துக் கொண்டிருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.