சிஏஏ சட்டத்திற்கு ஆதரவளிக்க அதிமுக எம்.பி.க்களை அனுப்பி வைத்ததே எடப்பாடி தான் - போட்டுடைத்த ஓபிஎஸ்!
சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடிய அதிமுக எம்பிக்களை அனுப்பி வைத்தது எடப்பாடி பழனிசாமி தான் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக்கூட்டம்
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக்கூட்டம் தேனியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் "ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட தோல்வி.
ஓ. பன்னீர்செல்வம் பேச்சு
சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடிய அதிமுக எம்பிக்களை அனுப்பி வைத்தது எடப்பாடி பழனிசாமி தான். தற்போது நிலைமைக்கு தகுந்தார் போல மாற்றி மாற்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
எங்கள் உடலில் அதிமுக ரத்தம் தான் ஓடுகிறது. அதை எவராலும் மாற்ற முடியாது. கட்சி, கொடியை பயன்படுத்த தடை வாங்கலாம் ஆனால் எங்கள் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்'' என்று தெரிவித்துள்ளார்.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
