அதிர்ச்சி தகவல் - ஏழை விவசாயிக்கு நோட்டீஸ் வந்த ED நோட்டீஸ்..!!’ பின்னணியில் பாஜக நிர்வாகி..!
சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அமலாக்கத்துறை சாதி பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ED நோட்டீஸ்
பொதுவாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தவர்களுக்கு தான் ED அதாவது அமலாக்கத்துறையின் நோட்டீஸ் வருவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ஏழை விவசாயி ஒருவருக்கு ED சம்மன் வந்துள்ள செய்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வரும் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அதே பகுதியில், அவர்கள் தந்தையால் வாங்கப்பட்ட 6 ½ ஏக்கர் நிலம் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். 70 வயதை இருவரும் கடந்துள்ளனர். இவர்களிடம் இருக்கும் நிலத்தை குணசேகரன் என்பவர் வாங்க எண்ணியதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு கண்ணையனும், கிருஷ்ணனும் மறுத்துள்ளனர்.
பாஜக நிர்வாகி..!
நிலத்தை வாங்க முற்பட்ட குணசேகரன் என்பவர் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகின்றார். நிலத்தை எப்படியேனும் வாங்க நினைத்த குணசேகரன், விவசாயிகள் இருவரும் ரூபாய் ஒரு லட்சத்தை குணசேகரன் இடத்தில் பணம் பெற்றதாக ஒரு போலி பத்திரத்தைத் தயார் செய்து, அதற்கு இறந்து போன பக்கத்து வயல்காரர் ஒருவரையும் சாட்சியாகத் தயார் செய்து, தொடர்ந்து மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொடுக்காத பணத்தைக் கொடுத்ததாகக் கூறி அதைக் கேட்டுத் தொடர்ந்து முதியவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜீன் 22 ஆம் தேதி விவசாயிகளுக்கு சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து ஆஜராகும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறையின் அந்தக் கடிதத்தில் விவசாயிகளின் சாதியின் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நிலமோசடி - மிரட்டல் போன்றவற்றை தாண்டி சாதாரண மக்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அதுவும், சாதி பெயரை குறிப்பிட்டு வந்தது தொடர்பான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் பாஜகவின் நிர்வாகியின் பெயரும் அடிபடுவதால், சலசலப்பை இந்த செய்தி உண்டாகியுள்ளது.