ஜோயாலுக்காஸ் நிறுவனத்தில் ED சோதனை... - சுமார் ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்...!
ஜோயாலுக்காஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ED சோதனை சுமார் 305.84 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் (ED) நேற்று பறிமுதல் செய்தது.
ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
சில நாட்களுக்கு முன் ஜோயாலுக்காய் நிறுவனத்தில் ED (Enforcement Directorate) சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, இந்த நகைச் சங்கிலி அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளை மீறியதாக தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தியாவிலிருந்து துபாய்க்கு அதிக அளவில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஜோயாலுக்காஸ் கடை நிறுவனத்தில் இந்த ED விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸ் என்பவருக்கு 100 சதவீதம் சொந்தமான துபாயில் உள்ள ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சியில் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சூரில் உள்ள ஷோபா நகரில் உள்ள நிலம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் அடங்கிய ₹81.54 கோடி மதிப்பிலான 33 அசையா சொத்துகள் ஜோயல்லுக்காஸின் சொத்துக்களில் ED இணைக்கப்பட்டுள்ளது.
91.22 லட்சம் மதிப்புள்ள 3 வங்கிக் கணக்குகள், ₹5.58 கோடி மதிப்புள்ள மூன்று நிரந்தர வைப்புத்தொகைகள் மற்றும் 217.81 கோடி மதிப்புள்ள ஜோயாலுக்காஸ் பங்குகளும் அமலாக்க இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
? Joyalukkas in ED net now on Hawala charge. Recently, Jewellery group cancelled its IPO ambitions. Had it be on offer, would've got beaten down. pic.twitter.com/lAPpddLNMd
— Karthik Reddy ?? (@bykarthikreddy) February 24, 2023