அசோக் குமார் கைது செய்யப்படவில்லை...வெளியான செய்திகளை மறுத்த ED

V. Senthil Balaji Tamil nadu Enforcement Directorate
By Karthick Aug 14, 2023 09:29 AM GMT
Report

தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கொச்சியில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் என செய்திகள் வெளியான நிலையில் அதனை அமலாக்கத்துறை மறுத்துள்ளது.

செந்தில் பாலாஜி  

ed-rubbishes-claims-of-arresting-ashok-kumar

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையின் விசாரணை முடிந்து புழல் சிறையில் வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கரூரில் கட்டி வரும் வீடு குறித்து பல முறை நோட்டீஸ் அளிக்கப்படும் நேரில் ஆஜராகாமல் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.

கைது செய்யப்பட்டாரா? 

வருமானவரி துறையும், அமலாக்கத்துறையும் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அசோக்குமார் நேரில் ஆஜராகாததால் அவரை தீவிரமாக அமலாக்கத்துறை தேட துவங்கியது. நேற்று, கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர் என தகவல்கள் வெளியானது.

கைது செய்யப்படவில்லை  

ed-rubbishes-claims-of-arresting-ashok-kumar

இந்நிலையில் தான் தற்போது அமலாக்கத்துறை சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு வெளியன் செய்திகளையும் அமலாக்கத்துறை மறுத்துள்ளது.