பாஜகவில் இணைய செந்தில் பாலாஜிக்கு அழுத்தம்...வழக்கறிஞர் கபில் சிபல் பகீர்..!!
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜகவில் சேரும் படி அமலாக்கத்துறை அழுத்தம் கொடுத்ததாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பகீர் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி ED விவகாரம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானது முதல் இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக தொடர்ந்து திமுக தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அவரின் பலத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ள அழுத்தம் தருவதற்காகவே இந்த கைது என கூறப்பட்டது.
இந்நிலையில், கைதான அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீன் தாக்கல் செய்துள்ளார். அவரின் இந்த ஜாமீன் மனுவில் வரும் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.
பாஜகவில் இணைய அழுத்தம்
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான கபில் சிபில், சட்டவிரோத பணபரிவர்தனையில் கைதான நிலையில், அது குறித்து எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
அதே நேரத்தில் இது அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெற்ற கைது என கூறிய அவர், அதே போல விசாரணையின் போது, செந்தில் பாலாஜியை நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்தார்.