அதிமுக பொதுக்குழு விவகாரம் - தேர்தல் ஆணையம் பரபரப்பு முடிவு

O Paneer Selvam ADMK Edappadi K. Palaniswami
By Karthick Aug 18, 2023 05:43 AM GMT
Report

அதிமுக பொதுக்குழு குறித்தான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பழைய பல விதிகள் மாற்றப்பட்டு, கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் போன்றோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

ec-answers--admk-case

இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், பொதுக்குழு குறித்தான வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

தேர்தல் ஆணையம் பதில் 

இந்நிலையில், கட்சியின் விதிகள் மாற்றம் குறித்தான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே தேர்தல் ஆணையத்தின் முடிவும் இருக்கும் என்றும் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.