40 வினாடி...குலுங்கிய இந்திய தலைநகரம்..அலறியடித்த மக்கள்

Delhi India Earthquake
By Karthick Oct 03, 2023 10:11 AM GMT
Report

இந்திய தலைநகர் டெல்லியில் 40 வினாடிகளுக்கு மேல் நிலநடுக்கம் நீடித்த காரணத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.

தலைநகரில்  நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியிலும், அதன் சுற்றுவட்டார புறநகர் பகுதிகள் மற்றும் National Captial Region (தேசிய தலைநகர் பிராந்தியம்) எனப்படும் NCR போன்ற இடங்களில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாள மாநிலத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவிலானது 6.2 ஆக பதிவாகியிருக்கின்றது.

earthquake-in-indian-capital-delhi-city

சரியாக இன்று மதியம் 2.51மணிக்கும் பிற்பகல் 2.53 மணிக்கும் என இரண்டு முறை இந்த ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 வினாடிகளுக்கு மேல் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

நேபாளத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் பூமியின் நிலப்பரப்பில் இருந்து 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பிற்பகல் 2.25 மணிக்கு ஏற்பட்ட முதலாவது நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவிலும், 2.53க்கு 6.2 ரிக்டர் அளவிலும் பதிவாகி உள்ளது. அதேபோல உ.பி.யிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தீவிரம் 5.5 ஆக பதிவாகி இருக்கின்றது.