டெல்லியில் நிலநடுக்கம்; அலறி அடித்து ஓடிய நடிகை குஷ்பூ
டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது நடிகை குஷ்பூ அலறி அடித்து ஓடி தெருவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
டெல்லியில் நிலநடுக்கம்
நேற்று இரவு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உணரப்பட்டன.
தற்போது நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் பாஜகவில் இருந்து வரும் நடிகை குஷ்பூவுக்கு அண்மையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கியது பாஜக.
அலறி அடித்து தெருவுக்கு ஓடிய குஷ்பூ
இதையடுத்து தனது அலுவல் பணி காரணமாக நடிகை குஷ்பூ டெல்லியில் இருந்துள்ளார்.இந்நிலையில் நிலநடுக்கத்தை அவரும் உணர்ந்துள்ளார்.
இதனால் பதறியடித்த குஷ்பூ, தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து சாலையில் வந்து தஞ்சம் அடைந்தார். பின்பு டெல்லியில் 4 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்ததாகவும், இதனால் மின்விசிறிகள், விளக்குகள் அசைந்தன என்றும், அவர் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
On the streets after feeling the tremors in Delhi. Strong tremors across NCR. Experiencing this after the earthquake followed by tsunami in India. pic.twitter.com/yGq9cpbB9F
— KhushbuSundar (@khushsundar) March 21, 2023